நூறு ஆண்டு வேப்ப மரத்தின் இலை, பூ, பட்டை, வேர்ப்பட்டை, காய் ஆகியவற்றை சம அளவில் எடுத்து உலர்த்து பொடி சூரணம் 2-5 கிராம் அளவு தேனில் காலை சாப்பிட்டு வந்தால் உடல் வலியும் வனப்பும் பெறும். காயகல்பமாகும். உடலில் எந்த நோயும் போகும். நீரிழிவு, சர்கரை குட்டம் முதலான எல்லா வகைத் தோல் நோயும் குணமாகும். புகையிலை, புளி, போகம் நீக்கினால் நூறாண்டு வாழலாம்.
வேப்பிலைக் கசாயம் கிருமிகளைக் கொன்று காய்ச்சலைக் கட்டுப்படுத்தும் தன்மை கொண்டதாகும். தினமும், காலை வேளையில் பத்து வேப்பிலைக் கொழுந்து எடுத்து ஐந்து மிளகுடன் சேர்த்து மென்று சாப்பிட்டு வந்தால் மலேரியாக் காய்ச்சல் குணமாகும். நீரிழிவு நோயாளிகள் தொடர்ந்து சாப்பிட்டு வர மாத்திரை எதுவும் இன்றிக் குணமாகும்.
வேப்பம்பட்டை 5 பலம், கஸ்தூரி மஞ்சள், பூண்டு, மிளகு, சீரகம் இவை வகைக்கு50 கிராம் எடுத்து இவற்றை இடித்துத் தூளாக்கி, ஒரே மாட்டின் பசும்பால் ஒரு படி நல்லெ ண்ணெய் ஒன்றரைப்படி எடுத்து இவையனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து காச்ச வேண்டும். உரிய பதம் வந்த தும் இறக்கி ஆறியவுடன் வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும். இந்த எண்ணெயைத் தேய்த்துக் குளித்து வந்தால் மண்டையிடி பீனிசம், வாதரோகங்கள், பாரிச வாயு, சீதளரோகம் சம்பந்தமுடையவர்கள், தோல் சம்பந்தப்பட்ட நோயுடையவர்கள் விரைவில் குணம் பெறுவார்கள்.
அத்துடன் அது பற்றரியின் காபனில் செயல்பட்டு சக்தியை அதிகரிக்கும் . சாதாரண பற்றரிகளை விட இது எடை குறைவானது.சாதாரண பற்றரிகளில் இரசாயப்பொருட்களாக லித்தியம், கோபால்ட் ஒக்சைட் ஆகியவை இருக்கும் இவற்றுக்குப் பதிலாக இந்த பற்றரியில் போராஸ் காபன் இடம் பெற்றுள்ளது அத்துடன் மற்றைய பற்றரிகளை விட மிகச் சிறிதானதும்எடை குறைந்ததுமான இதை கைத்தொலைபேசி(செல்போன்) மடக்கு கணணி(லப்டப்)உட்பட பல இலக்ரோனிக் சாதனங்களில் பயன் படுத்த முடியும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.
வேப்பம்பட்டை நாவல்மரப்பட்டை வகைக்கு 150 கிராம் எடுத்து இதனுடன் 50 கிராம் மிளகு 50 கிராம் சீமைக்காசிக்கட்டி இவற்றை நன்றாக உலர்த்தி இடித்து வைத்துக் கொண்டு ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு தேக்கரண்டி தூளைப்போட்டுக் காய்ச்சி எடுத்த கசாயத்தைத் தினம் இரு வேளை கொடுத்து வந்தால் நாட்பட்ட பேதி, கிராணி, சீதபேதி இவை குணமாகும்.
நரம்புகளாலுண்டாகும் இழப்பு, சீதளம் இவைகளைப் போக்க உந்தாமணி இலையை வேப்பெண்ணெயில் வதக்கிச் சூட்டுடன் ஒத்தடம் கொடுத்து வேப்பெண்ணெயை வலி மற்றும் ரணங்களுக்குத் தடவி வரக் குணம் கிடைக்கும்.
காற்றில் சார்ஜ் ஆகும் பற்றரி கண்டுபிடிப்பு - 1 உலகிலே முதன் முறையாக காற்றின் மூலம் சார்ஜ் ஆகக்கூடிய பற்றறியை அமெரிக்காவை சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர் .அத்துடன் இதற்கு "ஸ்டைர்" என்ற பெயரிட்டுள்ளனர்.இந்த பற்றரி மீது அமைக்கப்பட்டுள்ள வலை போன்ற பகுதி வழியாக காற்றிலுள்ள ஒட்சிசன் பற்றரிக்குள் கிரகிக்கப்படும் .
பணியில் ஏற்படும் மகிழ்ச்சியின் ரகசியம் ஒரே சொல்லில் உள்ளது - வல்லுநர்தன்மை. ஒரு விஷயத்தை எப்படிச் சிறப்பாக செய்ய வேண்டும் என்பதை அறிய, அதை ஒவ்வொரு வரும் மகிழ்ந்து செய்ய வேண்டும்
வேப்ப மரத்திலிருந்து உதிர்ந்த பூக்களைச் சேகரித்து வைத்துக் கொண்டு ஒரு வருடம் கழித்து இந்தப் பூவைக் கொண்டு ரசம் வைப்பார்கள். இந்த வேப்பம் பூ ரசம் பித்த சம்பத்தப்பட்ட நோய்களைக் குணப்படுத்தும்.
குதிரைகளை ஓட்டுவதில் சிறந்த சாதனையாளர் ஆவார்.அத்துடன் இவரை குதிரைகள் தூக்கி வீசியதில் நான்கு தடவைகள் கால் முறிவும், இடுப்பு எலும்புகள் உடைபட்ட போதும் இவர் அவற்றைப் பற்றி சிறிதும் கவலைப்படாது தனது விடாமுயற்சியால்குதிரையோட்டி 124 அரிய பரிசில்களை வென்ற சாதனையாளர் ஆவார்.
50 ஆண்டுகளுக்கு மேற்பட்ட முதிர்ந்த வேம்பின் வேர்ப்பட்டைப் பொடியுடன் முதிர்ந்த பூவரசம் பட்டைப் பொடி கலந்து 2 கிராம் அளவாகச் சிறிது சர்க்கரைக் கூட்டி காலை, மாலை நீண்ட நாட்கள் சாப்பிட்டு வரத் தொழுநோய் முதலான அனைத்துத் தோல் நோய்களும் குணமாகும்.
3 கிராம் வேப்பம் விதையை சிறிது வெல்லம் கூட்டி அரைத்துக் காலை, மாலையாக 40 நாட்கள் சாப்பிட மூல நோய் தீரும். நீண்ட நாள் சாப்பிட்டு வரத் தோல் நோய்கள், சூதக சன்னி, நரம்பு இசிவு, குடல் புழுக்கள் தீரும்.
5 கிராம் உலர்ந்த பழைய வேம்புப் பூவை 50 மி.லி. குடிநீர் விட்டு மூடி வைத்திருந்து வடிகட்டிச் சாப்பிட்டு வரப் பசியின்மை, உடல் தளர்ச்சி நீங்கும். கல்லீரலை நன்கு இயக்குவிக்கும்.
உந்தாமணி இலையை வேப்பெண்ணையில் வதக்கிச் சூட்டுடன் ஒத்தடம் கொடுக்க நரம்பு இசிவு, கரப்பான், கிரந்து, சிரங்கு, சுரம், சன்னிகளில் வரும் இசிவு, கண்ட மாலை கீல் வாதம் தீரும்.
வேம்பின் பஞ்சாங்கச் சூரணம் 10 அரிசி எடை நெய், தேன், வெண்ணெய், பாலில் 2 மண்டலம் கொடுக்க எந்த மருந்துலும் கட்டுப் படாத நோய்கள் மதுமேகம், என்புருக்கி, இளைப்பு, காசம் ஆகியவை தீரும். உடம்பு கெட்டி படும், நரை திரை மாறும்.
வேப்பங்கொழுந்தும் அதிமதுரப்பொடியும் சமன் சேர்த்து நீர் விட்டு அரைத்துப் பட்டாணி அளவாய் மாத்திரை செய்து நிழலில் உலர்த்தி நாள் தோறும் 3 வேளை ஓரிரு மாத்திரை கொடுத்து வர அம்மை நோய் தணியும்.
கண்களைச் சுற்றி கருவளையம் காணமல் போக
வாழைப்பழம் ஒன்றைக் கூழாக்கி,
இரண்டுசொட்டு எலுமிச்சைச்சாறு
மற்றும் முட்டையின் வெள்ளைக்
கருகலந்து முகத்தில்பூசி,காய்ந்ததும்
கழுவி விடுங்கள். தோலின் கருமை
மட்டுமில்லாமல், கண்ணைச் சுற்றி
உள்ள கருவளையமும் காணாமல்
போகும்.
அம்மை நோய் வந்தால் வேப்பிலையையும்
மஞ்சளையும் சேர்த்து அரைத்து அம்மை
மேலே தடவிய பின்பு வேப்பம் தழையைப்
போட்டு அதன் மேல் படுக்கவேண்டும்.
பனைநுங்கு,இளநீர் ,குளிர்மையான
உணவுகள் உண்ணவேண்டும்.இப்படிச்
செய்தால் இந்த நோய் குணமாகிவிடும்